
இந்த 9 பக்க கடிதத்தை, திமுக எம்.பிக்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர், பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வழங்கினர்.
அதில், மாநில சுயாட்சியை நிலைநிறுத்தும் பொருட்டு, மாநிலங்களுக்கு அதிக அதிகாரமளிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
புதிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும் என்றும், தமிழ்நாட்டில் மத்திய அரசு பணிகளில், உள்ளூர் மக்களுக்கு 90 விழுக்காடு பணிகளை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிறப்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை, 50 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டிற்கு, மத்திய அரசு தர வேண்டிய 7825 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும், பிரதமருக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
எங்களது செய்திகளை உடனுக்குடன் உங்கள் மொபைலில் வாட்சப்மூலம் தெரிந்துகொள்ள உடனே +919487841754 என்ற எண்ணிற்கு வாட்சப்மெசேஜ் அனுப்புங்கள்..!