புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நீதிமன்ற அரசு வழக்கறிஞராக க.செந்தில்குமார் பொறுப்பேற்பு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சூரக்காடு க. செந்தில்குமார் அவர்களை கந்தர்வகோட்டை அரசு வழக்கறிஞராக தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவின்பேரில், மற்றும் தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி அவர்களின் பரிந்துரைபடி அரசு வழக்கறிஞராக நியமனம் செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு தற்பொது கந்தர்வகோட்டை அரசு வழக்கறிஞராக க.செந்தில்குமார் பி.எஸ்.சி. பி.எல், அவர்கள் நேற்று பொறுப் பேற்றுக்கொண்டனர்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை அவர்களது இல்லத்தில் வழக்கறிஞர் செந்தில்குமார், வாழ்த்து பெற்றபோது ஆலங்குடி 1-வது வார்டு முன்னாள் கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி உடனிருந்தனர்.
மேலும் பொறுப்பேற்ற அரசு வழக்கறிஞருக்கு சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு சட்டத்துறை அமைச்சர் எஸ் .ரகுபதியிடம் பூங்கொத்து வாழ்த்து பெற்றார். அப்போது வழக்கறிஞர்கள், பொதுமக்கள் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போத்தி வாழ்த்து பெற்றனர்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Twitter – https://twitter.com/PudukaiNews