மூக்கம்பட்டியில் மாபெரும் ஜல்லிக்கட்டு திருவிழா


ஆலங்குடி அருகே உள்ள மூக்கம்பட்டியில் பிரசித்து பெற்ற ஸ்ரீ பிடாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி பாப்பான்குளம் திடலில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதையொட்டி காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அபிநயா அவர்கள் உறுதிமொழி வாசிக்க ஜல்விக்கட்டு விழாவை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்.வை முத்துராஜா அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.மூக்கம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
.
ஜல்லிக்கட்டு விழாவிற்கு 700 காளைகளும், 250 மாடுபிடி வீரர்களும் களத்தில் பங்கேற்றனர். முதன் முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதை யாரும் கட்ட மாடுபிடி வீரர்கள் முன்வரவில்லை. இதையடுத்து அலங்கரிக்கப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து ஆக்ரோஷமாக சீறிப்பாய்ந்த காளைகளின் பல காளைகள் மின்னல் வேகத்தில் சென்றன. சில காளைகள் களத்தில் நின்று தன்னை அடக்க வந்த வீரர்களை அருகில் நெருங்கவிடாமல் மிரட்டினர். இருப்பினும் பல காளகளை 300 மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் வீரர்களை தூக்கி வீசி பந்தாடியது. அப்போது பொதுமக்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர்.
ஜல்லிக்கட்டில், ஆலங்குடி, அன்னவாசல், இலுப்பூர், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, திருச்சி, மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திண்டுக்கல், தேனி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வந்திருந்த 853 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள், மாட்டின் உரிமையாளர்கள் உட்பட 30 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கிருந்த மருத்துவ குழுவினர் சிகிச்சை அளித்தனர். இதில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கிய வீரர்களும், வீரர்களிடம் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்துராஜா மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் அப்துல்லா ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள்.இதில், மின் விசிறி, கட்டில், குக்கர், பாத்திரங்கள், ஃப்ரிட்ஜ், தங்கம் மற்றும் வெள்ளி நாணயங்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டை ஆலங்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வடிவேல் தலைமையில் சம்பட்டிவிடுதி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகளை முக்கம்பட்டி கிராம மக்கள் மற்றும் விழாக்குழு கமிட்டியினர் செய்திருந்தனர்.
WhatsApp Group1 –https://chat.whatsapp.com/DLsLbA6xY9Y8jKppd2MXZ0WhatsApp Group 2 – https://chat.whatsapp.com/D7R8fqW80Fy2IN4Chms3iIFacebook Group – https://www.facebook.com/PudukaiNewsChannel/?ref=pages_you_manage Youtube –https://youtube.com/c/mrchenewsInstagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/Telegram – https://t.me/PudukkottaiNewsTwitter – https://twitter.com/Mr_pudukkottaiWebsite-http://www.mrchenews.com/ விளம்பரம் மற்றும் செய்தி தொடர்புக்கு – Call -9626374372