கறம்பக்குடி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு சைக்கிள் பேரணி

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து தாலுகா அலுவலகம் முன்பு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றியம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஒன்றிய செயலாளர் சேசுராஜ் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர் செங்கோடன் முன்னிலையில் தாலுகா அலுவலகம் முன்பு சைக்கிள் பேரணி தொடங்கி சீனி கடை முக்கம், பேருந்து நிலையம்,உள் கடை வீதியாக சைக்கிளில் வலம் வந்து HP பெட்ரோல் பங்க் முன்பு பெட்ரோல் டீசல் விலை உயர்வை எதிர்த்து மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி பெட்ரோல் பங்கில் அமைந்திருக்கும் நரேந்திர மோடி திருவுருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைக்குமாறு கோரிக்கை விடுத்தனர். சைக்கிள் பேரணி சீனிகடை முக்கத்தில் நிறைவுற்றது. சைக்கிள் பேரணியில் ஒன்றிய செயலாளர் சேசுராஜ், முன்னாள் மாவட்டச் செயலாளர் செங்கோடன், மாவட்ட குழு உறுப்பினர் ஆரோக்கியசாமி ஒன்றிய குழு உறுப்பினர்கள் திருஞானம், முருகேசன், காத்தலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Twitter – https://twitter.com/PudukaiNews