புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 1500 பனை விதைகள் நடும் விழாவை துவங்கி வைத்த எம்எல்ஏ

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அடுத்த புதுப்பட்டி நெப்பியா குளக்கரையில் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் பல்லவராயன் பத்தை ஊராட்சி சார்பாக 1500 பனை விதைகள் நடும் விழாவை புதுக்கோட்டை எம்எல்ஏ டாக்டர் வை.முத்துராஜா அவர்கள் பனை விதை நட்டு விழாவினை தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா புதுப்பட்டி நெப்பியா குளக்கரையில் சிட்டி ரோட்டரி சங்கம் மற்றும் பல்லவராயன் பத்தை ஊராட்சி சார்பாக 1500 பனை விதைகள் நடும் விழாவினை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் விநாயகா ரமேஷ் மற்றும் மக்கள் நன்மதிப்பு சேர்மேன் குபேந்திரன் ஏற்பாடு செய்திருந்தனர். இவ்விழாவில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை.முத்து ராஜா அவர்கள் கலந்துகொண்டு பனை விதை நட்டு விழாவினை துவங்கி வைத்தார்.
விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் சிட்டி ரோட்டரி சங்கம் சார்பாக பொன்னாடை போற்றி வரவேற்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியில் சிட்டி ரோட்டரி சங்க தலைவர் அக்ஷ்சயா சீனிவாசன் , செயலாளர் விநாயகா ரமேஷ், பொருளாளர் தங்கப்பா, பட்டய தலைவர் பாண்டியன், உடனடி தலைவர் குணசேகரன், துணைத்தலைவர் பிச்சையா, முன்னாள் தலைவர் சுப்ரமணியன், வீரையன், குபேந்திரன், அமிர்தராஜ் மற்றும் ரோட்டரி சங்க உறுப்பினர்கள், மற்றும் பல்லவராயன் பத்தை ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ராமையன், மதியழகன் ஒன்றிய கவுன்சிலர் பூங்கோதை முருகேசன் மற்றும் திராவிடமணி, முத்துச்சாமி, குபேந்திரன் மாமுண்டி, ஐயப்பன், நமச்சிவாயம்,அன்பு இளையராஜா, அருணாச்சலம் மற்றும் நூறு நாள் பணியாளர்கள் அனைவரும் கலந்துகொண்டு நான்காம் கட்ட நிகழ்வாக 1500 பனை விதைகள் நட்டு விழாவினை சிறப்பித்தனர்.
#MrChe #மிஸ்டர்சே
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
WhatsApp Group – https://chat.whatsapp.com/Fvy7SER3GAH2C0k36kGWxu
Facebook Group – https://www.facebook.com/groups/PudukaiNews
Youtube – https://www.youtube.com/channel/UCPGWEM634QbEL_krvaXAHEQ/
Instagram- https://www.instagram.com/pudukkottai_news_channel/
Telegram – https://t.me/PudukkottaiNews
Twitter – https://twitter.com/PudukaiNews